பதிவு செய்த நாள்
29
ஜூலை
2014
11:07
புதுச்சேரி: வரதராஜர் பெருமாள் கோவிலில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் மற்றும் வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 11 ஆண்டுகள் முடிந்ததால், கோவிலை 14.5 கோடி ரூபாய் செலவில் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த 2012ம் ஆண்டு அரசு முடிவு செய்தது. அதற்காக, அதே ஆண்டு டிசம்பர் மாதம் கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டது. ஆனால், புனரமைப்பு பணிகள் துவக்கப்படாமல் கிடப்பில் ÷ பாடப்பட்டது. இந்நிலையில், கோவில் புனரமைப்பு பணியை துவக்க, கடந்த 17 ம் தேதி சாரக்கால் நடப்பட்டது. அதையொட்டி, கோவில் உட்புறத்தில் உள்ள சன்னதிகள், ராஜகோபுரம், மடப்பள்ளி, கொடிமரம் உள்ளிட்ட பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, பொதுப் பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி தலைமையில், உதவி பொறியாளர் நல்லாமணி, ஆறுமுகம், கோவில் தனி அதிகாரி மணவாளன், செயல் அதிகாரி ராஜசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று கோவிலில் ஆய்வு செய்தனர். இம்மாத இறுதியில் புனரமைப்பு பணிக்கான டெண்டர் முடிந்து, பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.