பதிவு செய்த நாள்
29
ஜூலை
2014
12:07
திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதியில் உள்ள கோவில்களில், நாளை, ஆடிப்பூர விழா கொண்டாடப்படுகிறது. திருவள்ளூர், பஜாரில் உள்ள தீர்த்திஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு, நாளை, திரிபுரசுந்தரி அம்மனுக்கு, மாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், வளையல்கள் அணிவித்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடக்கிறது. பூங்கா நகர், சிவா - விஷ்ணு கோவிலில், பூங்குழலி அம்மனுக்கும், பத்மாவதி தாயாருக்கும் காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. பொன்னேரி வட்டம், பஞ்சேஷ்டியை அடுத்துள்ள, நத்தம் கிராமத்தில் பரிகார ஸ்தலமாக விளங்கும், காரிய சித்தி வினாயகர் மற்றும் திருவாலீஸ்வரர் கோவிலில், ஆனந்தவல்லி அம்மனுக்கு, ஆடிப்பூரத்தை முன்னிட்டு, நாளை மதியம் 3:00 மணிக்கு, பல வகையான பழங்களாலும், பஞ்சாமிர்தத்தாலும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 4:30 மணிக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜையும், மாலை 6:00 மணிக்கு, மகா தீபாராதனையும் நடைபெறுகிறது.