Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ... மேல்மருவத்தூரில் ஆடிப்பூர விழா கோலாகலம்! மேல்மருவத்தூரில் ஆடிப்பூர விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் திருவிழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2014
11:07

திருப்பூர்: செல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவையொட்டி, குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். திருப்பூர் நகரின் காவல் தெய்வமான, செல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 15ம் தேதி துவங்கியது. 22ம் தேதி, பூச்சாட்டு, கணபதி ஹோமம், கொடியேற்றம், சக்தி கரகம் அழைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. 23ம் தேதி, தங்கையின் திருமணத்துக்கு, அண்ணன் கொடுக்கும் சீர்வரிசையாக, வீரராகவ பெருமாள் கோவிலிருந்து, சீர் வரிசைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. அதன்பின், தினமும் கோட்டை முனியப்பன் கோவிலிலிருந்து சூலம் எடுத்து வருதல், டவுன் மாரியம்மன் கோவிலிலிருந்து பூவோடு எடுத்தல், ஆடி அமாவாசையன்று, கொடுமுடி தீர்த்தம் கொண்டு வந்து சிறப்பு அபிஷேகம் ஆகியன நடந்தது. விழாவையொட்டி மீனாட்சியம்மன் , சமயபுரம் மாரியம்மன், அங்காளம்மன், சவுடேஸ்வரி அம்மன் அலங்காரங்களில், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று காலை 6.00 மணிக்கு துவங்கியது. முதலில் பூசாரி குண்டம் இறங்கினார். அதன்பின், அம்ம<னுக்கு விரதம் இருந்த பக்தர்கள் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகளுடன் குண்டம் இறங்கினர். குண்டம் இறங்குதலுக்கு பின், அக்னி அபிஷேகம், மாவிளக்கு எடுத்து வருதல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. மதியம் 12.00 மணிக்கு அன்னதானமும், மாலை 6.00 மணிக்கு அம்மன் பூப்பல்லக்கில் வீதி உலாவும் நடந்தது.இன்று காலை, சிறப்பு அபிஷேகம், கொடி இறக்குதல், அம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரம், மஞ்சள் நீராட்டு உள்ளிட்டவை நடக்கின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar