சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு வெய்யலூர் மாரியம்மன் கோவில் தீமதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலூர் மாரியம்மன் கோயில் 3ம் ஆண்டு ஆடித் திருவிழா 18ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று இரவு அம்மன் வீதியுலா நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடந்தது. 26ம் தேதி பால்குடம் ஊர்வலம் நடந்தது. 27ம் தேதி இரவு அம்மன் வீதியுலாவும், 28ம் தேதி தீ மிதி திருவிழாவும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.