கோவை : கோவை மாவட்ட இந்து முன்னணி செயற்குழு கூட்டம், தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா, கோவையில் ஆக., 29 முதல் செப்., 2 வரை ஐந்து நாட்கள் நடத்தப்படும்.ஒரு அடி முதல், 13 அடி வரையிலான விநாயகர் சிலைகள் மொத்தம் 10,008 இடங்களில் பிரதிஷ்டை செய்ய முடிவானது.சுற்றுச்சூழல் பாதிக்காத பொருட்களால் சிலைகள் தயாரிக்கவேண்டும். செப்., 2 இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் தலைமையில், விசர்ஜன ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தவும் இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.