பதிவு செய்த நாள்
30
ஜூலை
2014
01:07
துவரிமான் : துவரிமான் சக்திமாரியம்மன் கோயிலில் ஆடிமுளைப்பாரி, பொங்கல் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியில் பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். ஆக.,3ல் பூச்சொரிதல் விழா நடக்கிறது. ஆக.,4 திருவிளக்குபூஜை, புஷ்பாஞ்சலி, ஆக.,6ல் பால்குடம், அக்னிச்சட்டி, மாலை 4 மணிக்கு பூக்குழி இறங்குதல், மாலை 5 மணிக்கு முளைப்பாரி வைகை ஆற்றில் கரைத்தல், ஆக.,7 ல் பொங்கல் படைத்தல், மஞ்சள் நீராட்டு நடக்கிறது.