கிருமாம்பாக்கம் கோவிலில் ஆகஸ்ட் 8ல் தெப்பல் உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2014 01:07
கிருமாம்பாக்கம்: கிருமாம்பாக்கம் சோலைவாழியம்மன் கோவில் தெப்பல் உற்சவம், வரும் 8ம் தேதி நடக்கிறது. கிருமாம்பாக்கத்தில் சோலைவாழியம்மன், முன்னடிவீரன், விநாயகர், ஐயனாரப்பன், கெங்காபவானி அம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதையொட்டி, காலை 6:00 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பகல் 12:00 மணிக்கு கொடியேற்றம், சாகை வார்த்தலும், மாலை, ஊரணி பொங்கல் வழிபாடும் நடந்தது. தொடர்ந்து, 8ம் தேதி மாலை தெப்பல் உற்சவம், 9ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.