பதிவு செய்த நாள்
30
ஜூலை
2014
01:07
பரமக்குடி : நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில், சவுந்தர்ய நாயகி அம்மன் ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா, ஜூலை 21 ல் கொடியேற்றப்பட்டு தினமும் அம்மன், வெள்ளி அன்ன, சிம்ம, கமல, ரிஷப, குதிரை, கிளி ஆகிய வாகனங்களில் வீதிவலம் வந்தார். நேற்று காலை 8.30 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, நான்கு மாட வீதிகளின் வழியாக காலை 10.15 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. தொடர்ந்து இரவு காமதேனு வாகனத்தில், அம்மன் வலம் வந்தார். இன்று காலை தீர்த்தவாரி, நாளை அம்மன் தபசு கோலம், மாலையில் சுவாமி - அம்மன் மாலை மாற்றும் நிகழ்ச்சி, ஆக.,1 காலை 9.30 முதல் 10.15 மணிக்குள் ஆடிப்பூர திருக்கல்யாணம் நடைபெறுகிறது.