சிறுவாபுரி முருகன் கோவிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2014 01:07
கும்மிடிப்பூண்டி : நேற்று, விஷேச தினத்துடன் விடுமுறை தினமும் சேர்ந்து வந்ததால், சிறுவாபுரி முருகன் கோவிலில், பக்தர்கள் நான்கு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். கும்மிடிப்பூண்டி அருகே, சின்னம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில். இக்கோவிலில், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.நேற்று, செவ்வாய்க்கிழமையுடன் ரம்ஜான் பண்டிகை விடுமுறை தினமும் சேர்ந்து கொண்டதால், திரளான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதல், இரவு வரை பக்தர்கள் கோவிலின் வெளிபுறத்திலும், பிரகாரத்திலும் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். நான்கு மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து முருகனை தரிசித்து சென்றனர். பாதுகாப்பு பணியில், 40 போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.