Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிறுவாபுரி முருகன் கோவிலில் 4 மணி ... புரவி எடுப்பு திருவிழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2014
02:07

திருப்பூர்: திருப்பூரில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பள்ளி வாசல் களில் சிறப்பு தொழுகை நடந்தது. ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள், 30 நாட்கள் விரதமிருந்து, பண் டிகையை நிறைவு செய்தனர். நேற்று முன்தினம் இரவு பிறை தெரிந்ததை முன்னிட்டு, நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இஸ்லாமிய பெருமக்கள் புத்தாடை அணிந்து, குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு திருப்பூரிலுள்ள பள்ளி வாசல்கள் மற்றும் பொது இடங்களில் சிறப்பு தொழுகை நடந்தது. பெரியகடை வீதி பெரிய பள்ளிவாசல், பெரியதோட்டம் பள்ளிவாசல், மாநகராட்சி அலுவலகம் அருகிலுள்ள பள்ளிவாசல், காதர்பேட்டை, பாத்திமா நகர், ஸ்ரீ நகர், காலேஜ் ரோடு உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில், சிறப்பு தொழுகைகள் நடந்தன. இதில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.தொழுகைக்கு பின், ஒருவரையொருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ஏழை, எளியோருக்கு புத்தாடைகள், உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளி வளாகத்தில் தவ்ஹீத் ஜமா அத் சார்பில், சிறப்பு தொழுகை நடந்தது. இதில், ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். அவிநாசி, தேவராயன் பாளையம், சேவூர், பல்லடம், தாராபுரம், காங்கயம், வெள்ளக்கோவில், மூல னூர் ஆகிய இடங்களி லுள்ள பள்ளி வாசல்களிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. அதில், கபர்ஸ்தானில் (மயானம்) முன்னோருக்கு வழிபாடு நடத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar