நத்தம் : பூதகுடி சதுரகிரி மலையில் அமைந்துள்ள மலையாண்டிகோயிலில் ஆடி வளர்பிறையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. நத்தம் அருகே பூதகுடியில் சதுரகிரி மலை உள்ளது. இங்கு முருகர், வேல் வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலித்துவருகிறார். ஆண்டுதோறும் ஆடி மாதம் வளர் பிறையில் குழந்தை பேறு இல்லாத தம்பதிகளுக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் வேல், குடைகளை காணிக்கையாக செலுத்தினர். மழைவேண்டி அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பூதகுடி கிராமத்தினர் செய்திருந்தனர்.