பதிவு செய்த நாள்
30
ஜூலை
2014
02:07
திருவள்ளூர் : திருவள்ளூர், திரவுபதி அம்மன் கோவிலில், அக்னி வசந்த விழா, வரும், 1ம் தேதி துவங்குகிறது. திருவள்ளூர், நேதாஜி சாலையில் உள்ள பஞ்சபாண்டவ சமேத திரவுபதி அம்மன் கோவிலில், வரும் ஆக., 1ம் தேதி கொடியேற்றத்துடன், யாக அக்னி வசந்த விழா துவங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் அம்மன் வீதி உலா நடைபெறும்.ஆக.,10ம் தேதி, யாக அக்னி வசந்த உற்சவம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, கடந்த 25ம் தேதி மகாபாரத சொற்பொழிவு துவங்கியது. தினமும் மதியம் 2:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை நடைபெறும் மகாபாரத சொற்பொழிவை கோவிந்தராஜன் நிகழ்த்துகிறார். திருவடிராயபுரம் முனுசாமியின் இசைவாசித்தலும், நடைபெற்று வருகிறது.