திண்டிவனம்: திண்டிவனம் நாகமுத்து மாரியம்மன் கோவிலில் 54ம் ஆண்டு கூழ்வார்த்தல் விழா நடந்தது. திண்டிவனம் ராஜாங்குளக்கரையில் அமைந்துள்ள நாகமுத்து மாரியம்மன் கோவிலில் 54ம் ஆண்டு கூழ்வார்ப்பு விழா நடந்தது. கடந்த 28ம் தேதி மாலை 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து 29ம் தேதி அதிகாலை மகா அபிஷேகம், சந்தனகாப்பில் தீபாராதனை, 8:00 மணிக்கு பூங்கரக வீதியுலா நடந்தது. நன்பகல் 12:00 மணிக்கு சாகைவார்த்தல் நடந்தது. இரவு 8:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இன்று இரவு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.