Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோலாகலமாக நடந்த கம்பம் நடும் விழா சிவன் கோவிலில் மண்டலாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நன்செய் இடையாறு மாரியம்மன் கோவிலில் பால்குட அபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2014
02:07

ப.வேலூர்: நன்செய் இடையாறு மாரியம்மன் கோவிலில், ஆகஸ்ட், 1ம் தேதி, 1,008 பால் குட அபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது. ப.வேலூர் அடுத்த நன்செய் இடையாறில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் ஆடிமாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை, 1,008 பால்குட அபிஷேகம் வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு விழா, ஆகஸ்ட், 1ம் தேதி கோலாகலமாக நடக்கிறது. விழாவை முன்னிட்டு, இன்று (ஜூலை, 30) காலை, 7 மணிக்கு, கணபதி, நவக்கிரகம் மற்றும் லட்சுமி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து, திருச்சி சமயபுரத்தில் இருந்து நன்செய் இடையாறு வரை குடை பவனியும், அம்மன் ஊர்வலமும், இரவு, 7 மணிக்கு, 1,008 திருவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை (ஜூலை, 31) காலை, 8 மணிக்கு, உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் மகா அவஹந்தி யாகம், பூர்ணாகுதி நடக்கிறது. மாலை, 4 மணிக்கு, ஜேடர்பாளையத்தில் இருந்து நன்செய் இடையாறு வரை, காவிரி ஆற்றில் பரிசல் மூலம் ஸ்வாமி பவனி வந்து, பக்தர்களுக்கு அரும்பாலிக்கிறார். ஆகஸ்ட், 1ம் தேதி, காலை, 7 மணிக்கு காலபூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை நடக்கிறது. அதை தொடர்ந்து, 1,008 பால்குட அபிஷேகம் அம்மனுக்கு செய்யப்படுகிறது. மாலை, 6 மணிக்கு, மகா மாரியம்மன் திரு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. அதை தொடர்ந்து, ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பால்குட அபிஷேகத்தன்று, காலை முதல், மாலை வரை பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, கோவில் பரம்பரை அறங்காவலர்கள், எட்டுபட்டி ஊர் தர்மகர்த்தாக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar