நாகர்கோவில் : ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகாவத், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். மூன்று நாள் நிகழ்ச்சிக்காக மோகன்பகாவத், கன்னியாகுமரி வந்தார். நாகர்கோவிலில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் கூட்டம், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொண்டார். நேற்று காலை 8.15 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டார். தொடர்ந்து, பாலசவுந்தரி அம்மன் சன்னதியில் விளக்குகள் ஏற்றி வழிபட்டார். கோயில் அருகே நின்ற சந்தேக நபரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். பின், மோகன் பகாவத் திருவனந்தபுரம் சென்றார்.