கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது. கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பால்குடத்துடன் கலந்து கொண்டனர். பின்னர் ஞானாம்பிகை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ரவிச்சந்திரன் செய்தார்.