உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு ஆடிப் பூர மாங்கல்ய பூஜை நடந்தது. உளுந்தூர்பேட்டையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு ஆடிப் பூர வளையல் அணியும் விழா மற்றும் மாங்கல்ய பூஜை நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து 10: 20 மணிக்கு அம்மனுக்கு சாற்றுவதற்காக வளையல்கள், மாங்கல்ய சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அம்மனுக்கு வளையல்கள், மாங்கல்ய பொருட்கள் அணிவித்து, தீபாராதனை நடந்தது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.