மண்ணாடிமங்கலம் : சோழவந்தான் அருகே மண்ணாடிமங்கலம் சக்தி முச்சந்தி மாரியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா நேற்று துவங்கியது.கோயிலில் காலை அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆக., 5 ல் காலை முளைப்பாரி, நெய்மாவிளக்கு எடுத்தல், பூச்சொரிதல் விழா நடக்கிறது.ஆக., 6ல் பால்குடம், அக்கினிச்சட்டி நேர்த்திக்கடன் செலுத்துதல், மறுநாள் இரவு வைகையில் முளைப்பாரி கரைத்தல், ஆக., 8ல் மஞ்சள்நீராட்டு நடக்கிறது.