மதுரை : மதுரை டவுன்ஹால் ரோடு பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை துார் வாரி தண்ணீர் தேக்க வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தியது.மதுரையில் பா.ஜ., பெருமாள் தெப்பம் மண்டல் நிர்வாகிகள் கூட்டம் தலைவர் ஹரிஹரசுதன் தலைமையில் நடந்தது. மாநில துணைத் தலைவர் சுரேந்திரன், பிரசார அணி துணைத் தலைவர் சசிராமன், நகர் தலைவர் முத்தனசாமி, பொது செயலாளர் கார்த்திக்பிரபு, துணைத் தலைவர் பாரதிராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதுடன், பாதாள சாக்கடையை முறையாக பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருதுமால் நதி தடுப்பு சுவரை உயர்த்த வேண்டும். ரேஷன் கடைகளில் உணவு பொருள் தட்டுபாடின்றி கிடைக்க சிவில் சப்ளை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.