பதிவு செய்த நாள்
31
ஜூலை
2014
02:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரமண மஹரிஷி முதியோர் இல்ல வளாகத்தில் ஆரோக்ய வாழ்வுக்கான தன்வந்திரி யாகம், முரளிதரஸ்வாமிகள் தலைமையில் நடந்தது. இதில், 600க்கும் மேற்பட்ட மூலிகைகள் பயன்படுத்தப்பட்டன. கமலா பீடம் சார்பில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் விரதமிருந்து, தன்வந்திரி யாகத்துக்கு பயன்படுத்தப்பட்ட மூலிகைகளை இருமுடி கட்டி தலையில் சுமந்து வந்தனர். மேலும், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, தன்வந்திரி பகவானை வழிபட்டனர். மேலும், இந்த யாகத்தின்போது, உலக நன்மைக்காகவும், நதி நீர் இணைப்புக்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை, கமலாபீடம் சார்பில், அதன் நிறுவனர் சீனுவாசன் மற்றும் ரமண மஹரிஷி முதியோர் இல்ல நிர்வாகி வரலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.