காளையார்கோவில் : மரக்காத்தூர் முத்துமாரியம்மன்கோவில் ஆடி உற்சவத்தை முன்னிட்டு முளைக்கொட்டுவிழா கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,தீபாராதனை நடந்தது.திருவிளக்கு பூஜை, அம்மனுக்கு கூழ்ஊற்றுதல் மற்றும் முளைக்கொட்டுதல் நிகழ்ச்சியும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.