திருத்தணி: சாய்பாபா கோவில்களில், நேற்று, பாலா பிஷேகம் நடந்தன. திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாரிதாங்கல் ஆகிய இடங்களில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று, காலை 8:00 மணிக்கு, மூலவருக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. முன்னதாக, மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. பஜனைக் குழுவினரால் பக்தி பாடல்கள் பாடப்பட்டன.