Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ... குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்! குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொட்டும் மழை நிறைபுத்தரி பூஜை : சபரிமலையில் திரண்ட பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 ஆக
2014
11:08

சபரிமலை : ஆண்டின் தொடக்கத்தில் விவசாயிகள், தங்கள் நிலத்தில் விளையும் விளைபொருட்களை, இறைவனுக்கு சமர்ப்பிக்கின்றனர். குறிப்பாக, நெல் முதல் போக சாகுபடியில் விளைச்சல் ஆனதும், அந்த நெற்கதிர்கள், கோவில்களில் இறைவனுக்கு படைக்கப்படுகிறது. கேரளாவில் சிறப்பு வாய்ந்த இந்த பூஜை, நிறை புத்தரி பூஜை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு நிறை புத்தரி பூஜை, நேற்று நடைபெற்றது. இதற்காக, சபரிமலை நடை, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு திறந்தது. அன்று, வேறு எந்த பூஜைகளும் நடைபெறவில்லை. இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
நேற்று காலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும், வழக்கமான பூஜைகளுக்கு பின், பாலக்காட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட நெற்கதிர்கள், கோவில் முன்புறம் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டன. அந்த கதிர்களை மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி தலையில் சுமந்து, கோவிலை வலம் வந்தார். ஸ்ரீ கோவிலுக்குள், அந்த நெற்கதிர்கள் பூஜிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. நேற்று பூஜைகள் நிறைவு பெற்று, இரவு, 10:00 மணிக்கு, நடை அடைக்கப்பட்டது. இனி ஆவணி மாத பூஜைக்காக, வரும், 16ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. அன்று, அடுத்த ஒரு ஆண்டு காலத்துக்கான தந்திரியாக, கண்டரரு ராஜீவரரு பொறுப்பேற்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், (பரிகார ஸ்தலம்),  குரு ... மேலும்
 
temple news
சோழவந்தான், சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயிலில் இன்று மாலை குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர், திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில்  குரு பெயர்ச்சியை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூரில், பேரூர் பட்டி நாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில், 450 கிலோ பூக்கள் கொண்டு, மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar