பானாம்பட்டு அம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2014 12:08
விழுப்புரம்: பானாம்பட்டு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பால்அபிஷேகம் நடந்தது. விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு, ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மூன்றாவது ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை 8:00 மணிக்கு பக்தர்களின் பால்குட ஊர்வலம், வேதபுரீஸ்வரர் கோவலில் இருந்து துவங்கியது. பெருமாள் கோவில் வழியாக ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு ஊர்வலம் வந்தடைந்தது. தொடர்ந்து 9:00 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. காலை 10:00 மணிக்கு தீபாரதனை நடந்தது. இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.