விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த நன்னாடு காளியம்மன் கோவிலில் ஆடிமாத சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை 3 மணிக்கு பால், இளநீர், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து, மாலை 6 மணிக்கு காளியம்மனுக்கு தீபாராதனை நடந்தது. இதில், அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.