பதிவு செய்த நாள்
07
ஆக
2014
01:08
காரிமங்கலம்: காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் மலைக்கோவிலில் பிரதோஷ வழிபாடு நாளை, 8ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, நாளை மாலை, 4.30 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடக்கிறது.
* தர்மபுரி கோட்டை ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், நெசவாளர் நகர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் பிரதோஷத்தையொட்டி நாளை மாலை, 4.30 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது.
* காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடம் ஸ்ரீ வேதவள்ளி சமேத பெண்ணேஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாடு நாளை நடக்கிறது. மாலை, 4.30 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரம் பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை குருக்கள் மோகன்குமார் மற்றும் பலர் செய்து வருகின்றனர்.
* பாலக்கோடு பால்வண்ணநாதர், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில், அடிலம் அடிலநாதர் கோவில், அரூர் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் ஆகியவற்றில் பிரதோஷத்தை முன்னிட்டு நாளை மாலை, 4 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது.