பதிவு செய்த நாள்
07
ஆக
2014
01:08
காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடம் ஸ்ரீ வேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவில் ஆடி நான்காவது வெள்ளி மற்றும் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதையொட்டி நாளை, 8ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.
* காவேரிப்பட்டணம் அடுத்த அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் ஆடி நான்காவது வெள்ளி, வரலட்சுமி பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.
* காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள் அருணேஸ்வரர் கோவில், வெள்ளையன் கொட்டாவூர் மாரியம்மன் கோவில், மந்தைவீதி மகாசக்தி மாரியம்மன் கோவில் ஆகியவற்றில் ஆடி நான்காவது வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
* தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சியம்மன் கோவில், துர்க்கையம்மன் கோவில், குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவில், அன்னசாகரம் மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில், எஸ்.வி., அங்காளம்மன் கோவில், நெசவாளர் சௌடேஸ்வரி அம்மன் கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், பிடமனேரி மாரியம்மன் கோவில், அப்பாவு நகர் ஓம் சக்தி மாரியம்மன் கோவில், ஒட்டப்பட்டி சமயபுரம் மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், ஏமலூர் மாரியம்மன் கோவில் உட்பட மாவட்டத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி நான்காவது வெள்ளி மற்றும் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், திருவீதி உலா, ஊஞ்சல் உற்சவம், திருவிளக்க பூஜை ஆகியவை நடக்கிறது.