துறையூர்: துறையூர் பெரியமாரியம்மன் கோவிலில், பஞ்ச பிரகார விழா நடந்தது. விழாவையொட்டி, பெரியமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து, சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில், ஊஞ்சலில் வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.