Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மனித நேயம் தழைத்திட வேண்டி ... நித்தீஸ்வரர் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை! நித்தீஸ்வரர் கோவிலில் ஏகதின ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 164 இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஆக
2014
12:08

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 164 இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், மண்டபம், பாம்பன், கீழத்தூவல், கமுதி, அபிராமம், ஆர்.எஸ்.மங்கலம், தேர்போகி, சாயல்குடி, எஸ்.பி.பட்டினம் உள்பட 164 இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். சிறப்பு வழிபாடு நடந்தது. கிராமிய போட்டிகளின் வென்ற சிறுவர்கள், இளைஞர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஹரே கிருஷ்ணா சத் சங்கம், யாதவர் பண்பாட்டு கழகம், யாதவர் இளைஞர் மன்ற நிர்வாகிகள் செய்தனர். கீழக்கரை: கொம்பூதி கண்ணபிரான் கோயிலில் 31ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று காலை 4 மணியளவில் சுதர்ஸன ஹோமம், கிராம தேவதைகள் வழிபாடு நடந்தது. பின்னர் "கோவிந்தா கோஷம் முழங்க 108 பால்குடங்கள் வீதியுலா வந்தது. முன்னதாக மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின் சந்தனகாப்பு அலங்காரத்தில் கிருஷ்ணன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று(ஆக.,18) காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு, கயிறு இழுக்கும் போட்டி, வழுக்குமரம் ஏறுதல், உறியடித்தல், கண்ணபிரான் அழைப்பு வைபவம், அலங்கார தேரில் உற்சவ மூர்த்தி புறப்பாடு போன்றவை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர். காஞ்சிரங்குடி: காஞ்சிரங்குடி கிராம கோகுலம் நகரில் கண்ணன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. விளையாட்டுப்போட்டிகள், திருவிளக்குபூஜை, நடந்தது. ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar