முறைப்படி நடைபெறும் திருமணத்தின் சடங்குகளின் விபரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2011 04:05
நடைமுறையில் உள்ள மாங்கல்ய தாரணத்திற்குப்பின், மணமகன் தன் கீழ் நோக்கிய வலது உள்ளங்கையால், மணமகளின் மேல் நோக்கிய வலது கை ஐந்து விரல்களையும் சேர்த்துப்பிடிப்பது தான் பாணிக்ரஹனம்.
கைத்தலம் பற்றியவாறு அக்னிக்கு வடபுறத்தில் மணமகன் தன் இடது கையால், மணமகளின் கால் கட்டை விரலை பிடித்துக்கொள்ள வேண்டும். அன்னவளமை, உடல் வலிமை, விரதங்களில் சிரத்தை, சுகவாழ்க்கை, செல்வச்செழுமை, பருவ காலங்களில் தன்மை, யாகயக்யஞங்களால் பெருமை என்ற ஏழு பாக்கியங்களையும் விஷ்ணு எப்போதும் அளித்துக் காப்பாராக, என்று கூறி ஏழு அடி எடுத்து வைக்க வேண்டும். இதுவே ஸப்தபதி எனப்படும். இந்த ஏழுடிகளை கடந்து வந்து நாம் நண்பர்களாகி விட்டோம். இனி வாழ்நாள் முழுவதும் அன்புடனும் ஆதரவுடனும் இணைபிரிய மாட்டோம். இன்ப, துன்பங்களைப் பகிர்ந்து மனம் ஒன்றி வாழ்வோம் என்று மணமகன், மணப்பெண்ணிடம் உறுதி மொழி அளிக்கிறான்.