Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யாருக்கு வணக்கம் சொல்ல வேண்டும்? பிள்ளையாருக்காக ஒரு வித்தியாசமான பூங்கா! பிள்ளையாருக்காக ஒரு வித்தியாசமான ...
முதல் பக்கம் » துளிகள்
கருடனிடம் வரம் வாங்கிய திருமால்..!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஆக
2014
05:08

நான் பறவைகளில் பட்சி ராஜனாக கருடனாயிருக்கிறேன் என் கீதையில் கூறியுள்ளான் கண்ணன். நித்யசூரிகளில் கருடன் இரண்டாமிடத்தை வகிக்கிறார். பொய்கையாழ்வார் கருடனை போற்றுகையில் அனந்தனாகிய ஆதிசேஷனைப் போலவே கருடனும் திருமாலுக்குப் பலவித சேவைகளைச் செய்கிறார் என்று குறிப்பிடுகிறார். அனந்தன், கருடன், விஸ்வக்சேனர் என்ற வரிசையில் அனந்தனான ஆதிசேஷன் இலக்குவனாகவும், பின்னர் ராமானுஜராகவும், பின்பு பெரியஜீயர் மணவாள மாமுனிகளாகவும் அவதரித்தார். விஸ்வக்சேனர் நம்மாழ்வாராக அவதரித்தார் என்பதை அறிவோம். கருட பகவானோ வேத ஸ்வரூபி. ஆளவந்தார் கருடனை வேதாத்மா விஹகேஸ்வரர் என்று போற்றுகிறார். இவரை பெரிய திருவடி என்றும் போற்றுவர்.

ஸ்வாமி தேசிகனுக்கு அவருடைய ஆசார்யர் கருட மந்திரத்தைதான் உபதேசித்தார். அதை ஜெபித்ததால் அவருக்கு ஹயவதனின் அருள் கிடைத்தது. கருடனை கருத்மான் என்றும் அழைப்பார்கள். தீரன் என்பது அதன் பொருளாகும். யாருக்கும் அஞ்சாதவர். இவர் ஒருசமயம் தேவலோகத்திலிருந்து அமிர்தத்தை எடுத்துவந்தாராம். அவரை தேவர்களாலும்- ஏன் தேவேந்திரனாலும் தடுக்கமுடியவில்லை. தன் இறகுகளை வீசி இந்திரனையே மயக்கமடையச் செய்தார். இதைக்கண்ட தேவர்கள் கருடனை ஸுபர்ணன் என்று புகழ்ந்தார்கள். இவரின் வீரத்தில் மகிழ்ச்சி கொண்ட திருமாலே, உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டாராம். அவர் பரமனைப் பார்த்து, நானே உமக்கு வரம் தருகிறேன்; என்ன வரம் வேண்டும்? என்று திருப்பிக்கேட்டாராம்.

புன்னகைத்த திருமால், நான் எப்போதும் உன் தோளுக்குமேல் இருக்கவேண்டும் என்று கேட்டாராம். அவ்வாறே ஆகட்டும் என்றார் கருடன். பிறகு திருமால் கருடனிடம் நீ வரம் ஏதும் கேட்கவில்லையே? என்று வினவ, நான் உமது தலைக்குமேல் இருக்க வேண்டும் என்று கேட்க, திருமாலும் அருளினார். அதனால்தான் நாரணன் அவர் தோள்மீதேறி தம் வாகனமாகக் கொண்டார். கருடனைத் தன் கொடியாக ஏற்று, தன் தலைக்குமேல் பறக்கும் கொடியில் இருக்கச்செய்தார். இதுதான் நாம் திருக்கோவில்களில் பார்க்கும் கொடிமரத்தின் தத்துவம். கொடிமரத்தின்கீழ் கருடன் சன்னிதியும் அமைந்திருக்கும். கருட பகவானைத் துதித்தால் கொடிய நோய்களிலிருந்து நிவாரணம், தொலைந்த பொருள் கிடைத்தல், சர்ப்ப தோஷ நிவர்த்தி உள்ளிட்ட அனைத்து நலன்களும் கிட்டும்.

 
மேலும் துளிகள் »
temple news
இன்று ஒரே நாளில் பிரதோஷம், சிவராத்திரி வருவது சிறப்பானதாகும். பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய ... மேலும்
 
temple news
பெருமாளுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது ஏகாதசி. ஆனி அபார ஏகாதசியான இன்று விரதம் இருந்து வழிபட ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது சஷ்டி விரதமாகும். செவ்வாய் கிழமையில் சஷ்டி விரதம் வருவது ... மேலும்
 
temple news
பெங்களூரு நகரில், புராதன பிரசித்தி பெற்ற கோவில்கள், பக்தர்களை ஈர்க்கின்றன. இவற்றில் மத்துாரம்மா ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூரில் காட்டி சுப்பிரமணியா உட்பட ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar