திருநள்ளாறு நளன்குளம் தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2014 01:08
காரைக்கால்: திருநள்ளார் நளன்குளத்தில் பக்தர்கள் பயன்படுத்திய அடைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் மேற்கொண்டுவருன்றனர். காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்கி வருவதால் நாள் தோறும் ஆயிரக்கணக்கிலும்,வார சனிக்கிழமைகளில் பல்வேறு மாநிலத்திலிருந்து சனிபகவானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிகாலையில் நளன்குளத்தில் குளித்துவிட்டு தங்கள் பரிகரத்திற்காக அனிந்திருக்கும் ஆடைகளை நளன் குளத்தில் விட்டு செல்கின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை என்பதால் பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் நீராடினர். பக்தர்கள் பயன்படுத்திய அடைகளை திருநள்ளார் கோவில் நிர்வாகம் சார்பில் குளத்தில் உள்ள அடைகளை அகற்றும் பணிகளை <ஊழியர்கள் மேற்கொண்டுவருகின்றனர். மேலும் பக்தர்கள் வசதிக்காக குளத்தில் பல்வேறு பகுதியில் உள்ள மேட்டார் மூலம் தண்ணீரை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொண்டுவருகிறது.