பதிவு செய்த நாள்
03
செப்
2014
12:09
குண்ணம் : மழை வேண்டி, நேற்று மாலை குண்ணம் மூக்கிலம்மன் கோவிலில், அம்மன் விக்ரஹத்தை நகர்த்திவைத்து, நுாதன முறையில் வழிபாடு நடத்தினர். சுங்குவார்சத்திரம் - வாலாஜாபாத் சாலையில், குண்ணம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில், பழமையான மூக்கிலம்மன் கோவில் உள்ளது. இக்கிராமவாசிகள், மூக்கிலம்மனை வழிபட்டு, விவசாய பணிகளை ஆரம்பிப்பது வழக்கம்.இந்த ஆண்டு, மழையில்லாமல், நெல் விதைப்பு பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, மழை வேண்டி, விவசாயிகள் நேற்று, மூக்கிலம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் செய்தனர்.அதைத் தொடர்ந்து, கிழக்கு முகமாக இருந்த மூக்கிலம்மன் மூலவர் விக்ரஹத்தை, வடகிழக்கு பக்கமாக திருப்பி வைத்தனர்.இவ்வாறு, அம்மனை நகர்த்தி வைத்தால், மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர்.