தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் திருமூலம் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர், தயிர், திருமஞ்சணம் ஆகிய அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.