Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ரெட்டிக்குப்பம் கிராமத்தில் 4 ... சாத்தூர் கோயிலில் சுத்தம் செய்யும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயிலில் யானை வளர்க்க தடை கோரி வழக்கு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2014
11:09

மதுரை : கோயில்கள், வீடுகளில் யானைகள் வளர்க்க தடை விதிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரை வில்லாபுரம் சரவணன் தாக்கல் செய்த பொது நல மனு: வனத்தில் யானைகள் உணவு தேடி தினமும் 18 மணி நேரம் நடக்கின்றன. அவைகள் 60 முதல் 75 வயது வரை வாழக்கூடியவை. இயற்கையான சூழ்நிலையில் வளர்ந்தால், 60 வயதுவரை வாழும். 1986 லிருந்து ஆசிய யானைகளின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளது.இயற்கைக்கு மாறாக யானைகளை கோயில்கள், வீடுகளில் கான்கிரீட் தளங்களில் கட்டிவைத்து வளர்க்கின்றனர். இந்தியாவில் யானையை பிடித்து பழக்குவது, வணிக ரீதியாக பயன்படுத்துவது தொடர்கிறது. அதிகாரிகள் கண்காணிப்பதில்லை.

குடும்பமாக வாழக்கூடிய இயல்புடைய யானைகள் கோயில்களில் தனியாக வாழ்வதால், உடல், மன ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது. யானைகள், குட்டிகளுக்கு 10 வயது வரை பால் கொடுக்கும். ஆனால், குட்டிகளை பிரித்து பயிற்சி என்ற பெயரில் துன்புறுத்துகின்றனர். தினமும் 10 கி.மீ.,நடக்க வேண்டிய யானைகளை, நகரங்களில் நடக்க அனுமதிப்பதில்லை.உடலை திருப்ப முடியாமல், குறுகிய கட்டடத்திற்குள் அடைத்து வைக்கின்றனர். கோயில் திருவிழாக்களின் போது ஊர்வலத்தில் அழைத்துச் செல்கின்றனர். கனமான பொருட்கள் மூலம் நெற்றியில் அலங்காரம் செய்கின்றனர். சரியாக
உணவளிக்காமல் வெயிலில் நடக்க வைக்கின்றனர். திருவிழா மற்றும் சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் இவ்வாறு செய்கின்றனர். இதனால் யானைகள் மிரண்டு, மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. சர்வதேச இயற்கை பாதுகாப்பு நிறுவன புள்ளிவிபரப்படி, ஆசிய யானைகள் அழிவின் விளிம்பில் உள்ளன. பாதுகாப்பது அவசியம்.யானை, தேசிய பாரம்பரிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய யானைகள் வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வருகின்றன.கோயில்கள், தனியார் வீடுகளில் யானைகள் வளர்க்க தடை விதிக்க வேண்டும். அவற்றை மீட்டு முதுமலைக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும். கோயில்கள், வீடுகளில் யானைகள் வளர்க்க உரிமம் வழங்க, வனத்துறைக்கு தடை விதிக்க வேண்டும், என குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் லஜபதிராய் ஆஜரானார்.தமிழக உள்துறை செயலாளர், வனத்துறை முதன்மைச் செயலாளர், அறநிலைத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவா: இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் வெண்கல சிலையை கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகாலி ... மேலும்
 
temple news
உடுப்பி; உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தரிசனம் தரிசனம் செய்தார். தொடர்ந்து ... மேலும்
 
temple news
மும்பை; காஞ்சி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை மும்பையில் உள்ள ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் 5ம் நாளானா காலை  உற்சவத்தில் கண்ணாடி ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் திருகார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் நேற்று (நவ.,27) மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar