Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏகாம்பரநாதர் கோவிலுக்கு ரூ.10 ... ஐயனார் கோவில் கும்பாபிஷேக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2014
01:09

திருத்தணி : சுந்தர விநாயகர் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான சுந்தர விநாயகர் கோவில், கட்டி முடித்து, 100 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து, நேற்று, மகா கும்பாபிஷேகம் கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி முன்னிலையில் நடந்தது.கோவில் வளாகத்தில், மூன்று யாகசாலைகள், 108 கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம், வாஸ்து, கோ பூஜை, உட்பட நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 7:40 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, கோவில் விமானத்தின் மீது கலச நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 10:00 மணிக்கு, மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், ஆட்சியர் வீரராகவ ராவ், அரக்கோணம் தொகுதி எம்.பி., அரி, நகர்மன்ற தலைவர் சவுந்தர்ராஜன், ஒன்றிய சேர்மன் ரவி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மாலை, 5:00 மணிக்கு உற்சவர் விநாயகர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ராமர் கோவில் : திருத்தணி, தணிகை மீனாட்சி அம்மன் கோவிலின் துணை கோவிலான ஸ்ரீராமர் பஜனை கோவிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கோவில் வளாகத்தில், மூன்று யாகசாலைகள், 108 கலசங்கள் வைத்து, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு ராமர் திருவுருவப் படம் பிரதிஷ்டை நடந்தது. பின்னர், காலை 6:00 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவில் கோபுரத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு, ராமானுஜ பக்த சபாவின் பஜனை பாடல்கள் பாடப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar