Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஹஜ் பயணிகளுக்கான வழிகாட்டுதல் ... மூலநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான ஓலை சுவடிகள் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2014
01:09

திண்டிவனம் : திண்டிவனத்தில் கிடைத்த, 300 ஆண்டுகள் பழமையான ஓலைச் சுவடிகள், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், கிடங்கல் கோட்டை, முத்துகிருஷ்ணன் தெருவில் வசிப்பவர்கள் பார்த்தசாரதி, 69, அவரது தம்பி பத்மநாபன், 65. ஆறு தலைமுறையாக கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில், பழமையான நெற்குதிரில் ஓலைச்சுவடி கிடைத்தது. அதை, பார்த்த சாரதியின் தந்தை திருநாவுக்கரசு பத்திரப்படுத்தி வைத்திருந்தார். இவர்களது மூதாதையர்கள், சித்த மருத்துவ சேவை செய்தனர். இந்த ஓலைச் சுவடிகளில் இருந்து சரியான தகவல்களை பெற முடியாததால் அப்படியே வைத்திருந்தனர். பத்மநாபனின் மனைவி பத்மாசினி, தாகூர் பெண்கள் கல்லூரி துணை முதல்வராக உள்ளார். இவரது முயற்சியால், சென்னை, தரமணி, தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு, ஓலைச்சுவடிகள் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது.

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன உதவி பேராசிரியர் தாமரைபாண்டியன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் ராஜேஷ் ஆகியோர் பார்த்தசாரதியின் வீட்டிற்கு வந்தனர். அவர்களிடம் இருந்த பழமையான ஓலைச் சுவடிகளைப் பெற்றுக் கொண்டனர். இவற்றை ஆய்வு செய்த தாமரை பாண்டியன் கூறியதாவது: சிவபெருமானின் புராணம் உள்ளிட்ட பக்தி இலக்கியங்கள், சித்த மருத்துவ குறிப்புகள் அடங்கிய பல ஓலைச்சுவடிகள் உள்ளன. இவை, 300 ஆண்டு களுக்கு முற்பட்டவை. சில, செல் அரித்து உள்ளன. இவற்றை, லெமன் கிராஸ் ஆயில் மூலம் சுத்தப்படுத்தி பூச்சிகள் நீக்கி, இதில் உள்ள கூட்டு எழுத்துகளை ஆய்வு செய்ய உள்ளோம். பல அரிய தகவல்கள், மருத்துவ குறிப்புகள் கிடைக்க பெறலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar