காயத்ரி தேவி அம்மன் கோவிலில் சராவண பவுர்ணமி சிறப்பு ஹோமம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2014 01:09
சிதம்பரம்: சிதம்பரம் காயத்ரி தேவி அம்மன் கோவிலில் ஆவணி மாதம் சராவண பவுர்ணமி உற்சவத்தையொட்டி சிறப்பு ஹோமம் நடந்தது. சி தம்பரம் வேத மாதா காயத்ரி தேவி அம்மன் கோவிலில் சராவண பவுர்ணமி <உற்சவம் கடந்த 7ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடந்தது. இதனையொட்டி கோவிலில் காயத்ரி தேவி அம்மனுக்கு தினம் மாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் அம்மன் புறப்பாடு நடந்தது. ஆவணி மாத பவுர்ணமி தினமான நேற்று காலை காயத்ரி தேவி அம்மனுக்கு சராவண பவுர்ணமி சிறப்பு ஹோமம் நடந்தது. இதனையெ õட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி மற்றும் நிர்வாகிகள், சபாநாயகர் கோவில் ராஜசேகர் தீட்சிதர் செய்திருந்தனர்.