பதிவு செய்த நாள்
11
செப்
2014
12:09
திருவள்ளூர்: வேம்புலி அம்மன் கோவிலில், 10 நாள் ஜாத்திரை உற்சவம், அம்மன் வீதி புறப்பாடுடன், நிறைவடைந்தது. திருவள்ளூர், தேரடி அரு÷ க, வேம்புலி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கிராம தேவதை கோவிலான இங்கு, கடந்த மாதம், 29ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் ஜாத்திரை உற்சவம் துவங்கியது. தினமும் காலை 8:00 மணிக்கு அபிஷேகமும், புஷ்ப அலங்காரமும் நடைபெற்றது. கடந்த 6ம் தேதி, காலை 7:00 மணிக்கு, புஷ்ப அலங்காரமும், இரவு 8:00 மணிக்கு, பால் குடம் எடுக்கப்பட்டது. 10ம் நாள் உற்சவம், காலை 7:00 மணிக்கு, அபிஷேகம், புஷ்ப அலங்காரத்துடன் துவங்கியது. அன்று நாள் முழுவதும் பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். அன்றிரவு அம்மன் வீதி புறப்பாடு வாண ÷ வடிக்கையுடன் சிறப்பாக நடைபெற்றது.