பாலக்காடு: செம்பை வைத்தியநாத பாகவதரின் 118-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, இரு நாட்களாக நடந்த சங்கீத உற்சவம் நிறைவு பெற்றது. கேரளா, பாலக்காடு மாவட்டம் செம்பை கிராமத்தில், நேற்று முன்தினம் சங்கீத உற்சவம் துவங்கியது. கோயம்புத்துார் ஆர்ய வைத்திய பார்மசி இயக்குனர் கிருஷ்ணகுமார் துவக்கி வைத்தார். மிருதங்க வித்வான் திருச்சூர் மோகன், செம்பை வித்யாபீடம் செயலர் கீழத்துார் முருகன் பங்கேற்றனர்.நேற்று காலை 11:45 மணிக்கு, செம்பை வித்யா பீடம் 29-வது ஆண்டு மாநாட்டை மாவட்ட நீதிபதி இந்திரா துவக்கி வைத்தார். செம்பை தாமோதரன் நம்பூதிரிபாடு பேசினார். கைதப்புறம் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.மண்ணுார் ராஜகுமாரனுண்ணியின் இசைக் கச்சேரி நடந்தது. இசை நிகழ்ச்சிகளில் 200 இளைய தலைமுறை பாடகர்கள் பங்கேற்றனர். நேற்றுடன் உற்சவம் நிறைவு பெற்றது.