திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கீழையூர் பாலசுப்ரமணியர் கோவிலில் கிருத்திகை விழா நடந்தது. திருக்கோவிலூர், கீழையூரில் உள்ள பாலசுப்ரமணியர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு மூலவர் வள்ளிதேவசேனா சமேத பாலசுப்ரமணியருக்கு காலை 7:00 மணிக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 9:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு லட்சார்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது.