பதிவு செய்த நாள்
15
செப்
2014
11:09
திருப்பதி: திருமலையில், 50 ரூபாய், சுதர்சன டிக்கெட் தரிசனத்திலும், சம்பிரதாய உடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.திருமலை ஏழுமலையானை, ஆர்ஜித சேவையில், தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, வேட்டி, சட்டை, துண்டு, பைஜாமா குர்தா, சேலை, பாவாடை, தாவணி, பஞ்சாபி உடைகள் கட்டாயமாக்கப்பட்டன. அதன்பின், வி.ஐ.பி., பிரேக் தரிசனத்திற்கும், சம்பிரதாய உடைகளை தேவஸ்தானம் கட்டாயமாக்கியது. ஒரு மாதத்திற்கு முன், 300 ரூபாய் விரைவு தரிசனம், முன்பதிவு செய்த பக்தர்களும், சம்பிரதாய உடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும் என, அறிவித்தது. தற்போது, 50 ரூபாய் சுதர்சன டிக்கெட், முன்பதிவு செய்த பக்தர்களும், சம்பிரதாய உடை அணிந்தால் மட்டுமே, ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவர் என, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.சம்பிரதாய உடை அணியாத பக்தர்கள், தரிசன வரிசையில் இருந்து வெளியேற்றப்படுவர்.