பதிவு செய்த நாள்
15
செப்
2014
11:09
சென்னை : ஹஜ் யாத்திரீகர்களுக்காக, கேரள மாநிலம், பெரோக் ரயில் நிலையத்தில், முக்கிய ரயில்கள், மூன்று நிமிடங்கள் நின்று செல்ல வசதி செய்யப்பட்டு உள்ளது. சென்னை சென்ட்ரல் - மங்களூர் எக்ஸ்பிரஸ், மெயில் ரயில்கள் மற்றும் சென்னை எழும்பூர் - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரு மார்க்கங்களிலும், கேரள மாநிலம், சோரனுார் - கோழிக்கோடு இடையே உள்ள, பெரோக் ரயில் நிலையத்தில், நேற்று முதல், நவம்பர், 3ம் தேதி வரை, ஒருசில நாட்களை தவிர்த்து, மற்ற நாட்களில், மூன்று நிமிடங்கள் நின்று செல்லும்.