பதிவு செய்த நாள்
18
செப்
2014
12:09
மணலி : மேம்பால கட்டுமான பணியில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்தோர், விஸ்வகர்மா பூஜையை நேற்று கொண்டாடினர். ஒடிசா, பீகார் உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்தோர், திருவொற்றியூர் மேம்பால பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள், விஸ்வகர்மா பூஜையை நேற்று கொண்டாடினர். மேம்பாலத்தில், விஸ்வகர்மா கடவுளுக்கு, மாதிரி கோவிலை உருவாக்கினர். அந்த கோவிலின் முகப்பு மற்றும் நுழைவாயிலில் பலுõன்களை கட்டி, அமர்க்களப்படுத்தினர். மலர்களால் அலங்கரித்த விஸ்வகர்மாவுக்கு, பெருமாள் கோவில் பூசாரிகள், யாகம் வளர்த்து, துர்கா பூஜை மற்றும் கணபதி ஹோமத்தை நடத்தினர். பின், பிரசாதம் வழங்கப்பட்டது. இதுகுறித்து, வடமாநிலத்தவர்கள் கூறுகையில், ‘தமிழகத்தில் சரஸ்வதி பூஜைக்கு பின் ஆயுதபூஜை கொண்டாடுகின்றனர். அதுபோல, விஸ்வகர்மா கடவுளை, வடமாநிலத்தில் வசிக்கும் கட்டுமான தொழிலாளர்கள் மட்டுமின்றி, நகை செய்பவர்களும் (ஆசாரி) கொண்டாடுவர். அதுபோல், நேற்று நாங்கள், தொழிலில் எந்தவித பாதிப்பும் வராமல் காக்க, விஸ்வகர்மாவுக்கு யாகம் வளர்த்து, பூஜை செய்தோம்,’ என்றனர்.