ஆனைமலை : தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, அங்கலக்குறிச்சி கோபால்சாமி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள காலசம்ஹரா பைரவ மூர்த்திக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஆனைமலை அருகே உள்ள அடிவாரத்தில் அமைந்துள்ளது கால சம்ஹார மூர்த்தி பைரவர் கோவில். தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இங்கு பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பைரவர் மூர்த்திக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. பைரவருக்கு பால் சந்தனம், இளநீர், திருமஞ்சனம், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிேஷகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. மகா அபிேஷகம் முடிந்த பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.