Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஸ்ரீரங்கம், சமயபுரத்தில் நவராத்திரி ... கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி ஒப்பாரி பெண்கள் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2014
12:09

லாலாப்பேட்டை: லாலாப்பேட்டை அருகே மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தி பெண்கள் ஒப்பாரி வைத்த, சில மணி நேரத்தில் மழை கொட்டி தீர்த்ததால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை தெற்கே அமைந்துள்ள கிராமங்கள் அனைத்தும் வானம் பார்த்த பூமியாக உள்ளது. பருவகாலங்களில் மழை பெய்தால் மழையை பயன்படுத்தி பயிர்கள் சாகுபடி செய்வது வழக்கம். கடந்த சில ஆண்டாக பருவமழை தவறியதால் மானாவாரி விவசாயமும் பெருமளவு பாதிக்கப்பட்டது. மானாவாரி நிலங்கள் அனைத்தும் தரிசுகாடுகளாக கிடக்கிறது. இந்நிலையில் லாலாப்பேட்டை அடுத்த கே. புதுப்பட்டியில் கிராம மக்கள் மழை வேண்டி வழிபாடு நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து மக்கள் லாலாப்பேட்டை அடுத்த கருப்பத்தூர் காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடி தீர்த்தகுடம் கொண்டு சென்றனர். பின்னர் கே.புதுப்பட்டியில் உள்ள மகாமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து லட்சுமணம்பட்டி பாமலாயிம்மன், பழைய ஜெயங்கொண்டம் மலையாளசாமி, கள்ளுக்கட்டை பிள்ளையார், சடையாண்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரவு கே.புதுப்பட்டியில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வீடு வீடாக சென்று சாப்பாடு வாங்கி வந்தனர். பின்னர், கோவிலின் முன் வருணபகவானுக்கு படையல் போட்டு மழை வேண்டி பெண்கள் ஒன்று கூடி ஒப்பாரி வைத்து அழுது பிரார்த்தனை செய்தனர். ஒப்பாரி நடந்து கொண்டிருந்த போதே கே.புதுப்பட்டி, குப்புரெட்டிப்பட்டி, ஓமாந்தூர், மேட்டு மகாதானபுரம், மகாதானபுரம், லாலாப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இடியுடன் கூடிய மழை ஒருமணி நேரம் கொட்டித் தீர்த்ததால் விவசாயிகள் உட்பட அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar