ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி காலை 9.30 மணிக்கு கருடாழ்வார் முத்திரை பதித்த கொடி நான்கு மாட வீதிகளை, சுற்றி கொண்டு வரப்பட்டு, கொடிமரத்தில் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பூஜைகளை கல்யாணம் பட்டர் செய்தார். கோயில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் இரவு சந்திர பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அக்.,4 அன்று காலை 7மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருள தேரோட்டம் நடக்கிறது. கடைசி நாளன்று கோபால விலாசத்தில் புஷ்பயாகம் நடக்கிறது.