சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது. சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ÷ காவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. நிகழ்ச்சியையொட்டி கடந்த 24ம் தேதி காலை சின்னசேலம் மெயின் ரோட்டில் உள்ள வாசவி பூங்காவில் சக்தி அழைத்தல் நடந்தது. தொடர்ந்து திருமஞ்சனம், 17 வகையான அபிஷேகங்கள், சகஸ்ரநாம பூஜைகள் செய்து வைக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இரவு 7 மணியளவில் மகிஷாசுர வர்த்தினி அலங்காரம் செய்து, நவராத்திரி குழுவினரால் கொலு பொம்மை அமைத்து பஜனைகள் நடந்தது. ஒன்பது நவகன்னிகள் வைத்து பூஜைகள் நடந்தது. கட்டளைதாரர்கள் மோகன், சீனுவாசன் உட்பட திரளான பக்தர்கள் பங்÷ கற்றனர்.