சிதம்பரம்: புரட்டாசி 2ம் சனிக்கிழமையையொட்டி சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. சிதம்பரம் சபாநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜர் சுவாமி கோவில் புரட்டாசி மாதம் 2ம் சனிக்கிழமையையொட்டி, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.