மூங்கில்துறைப்பட்டு: ராவுத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு வெற்றிலை மாலை அலங்காரம் நடந்தது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த ராவுத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று பகல் 12:00 மணி முதல் மதியம் 1:00 மணிக்குள் சுவாமிக்கு வடமாலை, வெற்றிலை , எலுமிச்சை , பணம், துளசி, மலர்களால் மாலை அணிவித்து மகா திருமஞ்சனம் மற்றும் வெண்ணை காப்பு நிகழ்ச்சி நடந்தன. இதனைத்தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்துச் சென்றனர்.